தமிழ்நாடு

tamil nadu

வளைகுடா பகுதிகளில் அமெரிக்காவின் இருப்பு ஆபத்தை விளைவிக்கும் - ஈரான்

By

Published : Dec 16, 2019, 1:30 PM IST

வளைகுடா பகுதிகளில் வெளிநாட்டவரின் இருப்பு பாதுகாப்பை அதிகரிக்காது மாறாக பேராபத்தையே விளைவிக்கும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

Javad Zarif
Javad Zarif

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜவாத் ஸரீஃப் இதுகுறித்து கூறுகையில், "சில உலக நாடுகள் இங்கிருக்கும் சிக்கலை பயன்படுத்தி, இப்பகுதிக்குள் தங்களின் ராணுவ இருப்பை அதிகரித்துக்கொள்ள முயல்கிறார்கள்.

இங்கிருக்கும் வெளிநாட்டினரின் இருப்பு, இப்பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்காது. மாறாக ஆபத்தையே உருவாக்கும்" என்றார்.

மேலும், வளைகுடா நாடுகளுக்கு அதிக ஆயுதங்களை விற்கும் வாஷிங்டனின் கொள்கை, இப்பகுதியில் ஆயுதப் பயன்பாட்டை அதிகரிக்கவே செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக லண்டனில் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details