தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 11, 2020, 6:24 PM IST

ETV Bharat / international

'மன்னிக்க முடியாத தவறு': உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்!

தெஹ்ரான்: உக்ரைன் நாட்டின் பயணிகள் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

'Unforgivable mistake': Iran on Ukrainian jetliner crash
'Unforgivable mistake': Iran on Ukrainian jetliner crash

ஈரான் நாட்டின் முக்கிய தளபதி காசிம் சுலைமானி, அமெரிக்க ராணுவம் நடத்திய ஆளில்லாத விமான தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பான காணொலிக் காட்சிகள் வெளியாகி, ஈரான் நாட்டை அமைதி இழக்க செய்தது. அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொந்தளித்தனர்.

இதற்கு அமெரிக்கா மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். இந்நிலையில் ஈரானில் கடந்த 8ஆம் தேதி, உக்ரைன் பயணிகள் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது..

இதில் விமானத்தில் பயணித்த 176 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது விபத்து இல்லை, ஈரானின் திட்டமிட்ட தாக்குதல் என்று அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கூறிவந்தனர்.

அமெரிக்கா, கனடாவின் குற்றச்சாட்டுக்கு ஈரான் முதலில் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் ஈரான் பிரதமர் ஹாசன் ரூஹானி (Hassan Rouhani) ட்விட்டரில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ளார்.

அதில், “மிகப்பெரிய மன்னிக்க முடியாத தவறு நடந்து விட்டது” என வருந்தியுள்ளார். உக்ரைன் விமான விபத்து குறித்து நடந்த விசாரணையில் அது மனித தவறால் ஏற்பட்ட விபத்துதான் என தகவல்கள் வெளியாகின.

தற்போது அது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஈரானில் விழுந்து நொறுங்கிய விமானம்

ABOUT THE AUTHOR

...view details