மத்திய கிழக்கு நாடான ஏமனின், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்றது வருகிறது.
ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழக்கக் காரணமான இந்தப் போரில், ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும், ஹவுத்திகளுக்கு ஈரானும் உதவிவருகிறது. இந்நிலையில், ஏமனின் அண்டை நாடான சவுதி அரேபியாவை ஒட்டியுள்ள அல்-ஹாஸிம் நகர் மீது தாக்குதல் நடத்திய ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அப்பகுதியைக் கடந்த வாரம் கைப்பற்றினர்.
இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், நிலைமை குறித்து ஆய்வு மேற்கொள்ள ஏமனுக்கான சிறப்பு ஐநா தூதர் மார்டின் கிரிஃபித்ஸ் அல்-ஹாஸிம் நகருக்கு நேற்று பயணம் மேற்கொண்டிருந்தார். அரசு அலுவலர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஏமன் தற்போது முக்கிய திருப்பத்தில் உள்ளது. ஒன்று அமைதிக்கு திரும்ப வேண்டும் அல்லது பயங்கர மோதலுக்கு இரையாக வேண்டும்.