தமிழ்நாடு

tamil nadu

நள்ளிரவில் தாக்குதல் தொடுத்த தலிபான்கள்!

By

Published : Sep 1, 2019, 9:17 AM IST

காபுல்: ஆப்கானிஸ்தானின் கன்டூஸ் நகர் மீது நேற்று நள்ளிரவு திடீர் தாக்குதலை நடத்திய தலிபான் பயங்கரவாதிகள், அந்நகரில் உள்ள அரசு கட்டிடங்களை ஒவ்வென்றாக கைப்பற்றி வருகின்றனர்.

kunduz afghnistan

ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான கன்டூஸில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் (உள்ளூர் நேரம்) தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, அங்குள்ள சில அரசுகட்டிடங்களைக் கைப்பற்றியுள்ளனர். இதில், 10 காவல் துறையினர், எட்டு தாலிபான்கள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து, “நேற்று நள்ளிரவு நகரின் பல்வேறு திசைகளிலும் இருந்து தாலிபான்கள் தாக்குதல் நடத்தினர். நகரில் உள்ள அரசு கட்டிடங்களை ஒவ்வொன்றாகக் கைப்பற்றி வருகிறோம்" என்று தலிபான் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போரை நிறுத்துவது குறித்து, தலிபான்களிடம் அமெரிக்க அரசு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்தத் தாக்குதலானது அரங்கேறியுள்ளது. இது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details