தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா: ஸ்பெயினில் ஒரேநாளில் 514 பேர் உயிரிழப்பு - கரோனா வைரஸ் தொற்றால் ஸ்பெயின் நாட்டில் ஒரே நாளில் 514 பேர் உயிரிழப்பு

மாட்ரிட்: கரோனா வைரஸ் பெருந்தொற்று நாளுக்கு நாள் ஸ்பெயின் நாட்டில் அதிகரித்துவரும் நிலையில், நேற்று ஒரேநாளில் மட்டும் 514 பேர் உயிரிழந்துள்ளனர்.

Spain virus death toll rises
Spain virus death toll rises

By

Published : Mar 25, 2020, 10:01 AM IST

சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் கிட்டத்தட்ட 180 நாடுகளில் பரவியுள்ளது. கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக இத்தாலி, ஈரான், அமெரிக்கா ஆகியன இருந்துவந்தன.

தற்போது ஸ்பெயின் நாட்டிலும் இந்தக் கரோனா தொற்று கடுமையாக அதிகரித்துள்ளதால் அந்நாட்டில் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதன்படி நேற்று ஒரேநாளில் மட்டும் 514 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை அங்கு இரண்டாயிரத்து 696 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அருகில் உள்ள இத்தாலி இப்போது இந்த தொற்றுநோயின் மையமாக உள்ளது. அங்கு ஆறாயிரம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். 65 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:கரோனாவுக்கு தமிழ்நாட்டில் முதல் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details