தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பெய்ரூட்டில் போலீஸ்காரர்களுடன் மோதிய மக்கள்: போர்க்களமாகக் காட்சியளித்த வீதிகள்! - லெபனான் பவுண்ட் சரிவு போராட்டம்

பெய்ரூட்: பொருளாதார வீழ்ச்சி காரணமாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று நடந்த போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

Beirut
Beirut

By

Published : Jun 13, 2020, 4:33 PM IST

மத்தியக் கிழக்கு நாடான லெபனானில் சரிந்துவரும் பொருளாதாரம், டாலருக்கு நிகரான லெபனான் பவுண்டின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக அந்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று (ஜூன் 11) வீதிகளுக்குப் படையெடுத்த மக்கள் அங்கு பணியிலிருந்து காவல் துறையினர் மீது கற்களையும், பட்டாசுகளையும் வீசியுள்ளனர்.

இதையடுத்து, காவல் துறையினர் போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசி அப்புறப்படுத்த முயன்றனர். தொடர்ந்து, மாறிமாறி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதால் வீதிகள் போர்க்களமாகக் காட்சியளித்தன. இதனிடையே, லெபனான் பவுண்டின் நாணய மதிப்பை மீட்டெடுக்க, சந்தையில் புதிய டாலர் நோட்டுக்களைப் புழக்கத்தில் விட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஆனால், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ள மக்கள் இந்த அறிவிப்பைச் சந்தேகப் பார்வையுடனே பார்த்து வருகிறார்கள். அந்நிய செலாவணி சந்தையில், கடந்த 30 ஆண்டுகளாக லெபனான் பவுண்டின் மதிப்பு ஒரு டாலருக்கு ஆயிரத்து 500ஆக இருந்ததுவந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக இதன் மதிப்பு 70 விழுக்காடு வரை சரிவைச் சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : 'கரோனா உள்ளவர்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டலாம்'

ABOUT THE AUTHOR

...view details