இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக நீடித்துவரும் பிரச்னையை தீர்க்க, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 'மத்திய கிழக்கு திட்டம்' என்ற ஒன்றை முன்மொழிந்தார். பிரச்னைக்குரிய பகுதிகளை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இருநாடுகளும் பிரித்துகொள்வது என்றும் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசிலம் தொடரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, பாலஸ்தீனம் தலைமையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து, 57 உறுப்பு நாடுகளைக் கொண்ட இந்த ஓஐசி அமைப்பு, ட்ரம்பின் மத்திய கிழக்கு திட்டத்தை நிராகரித்துள்ளதாக அறிவித்தது.