மத்திய கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தின் இதயமாகக் கருதப்படும் இஸ்ரேல் கடந்த ஒரு வருடத்திற்குள் மூன்று முறை தேர்தலைச் சந்தித்துள்ளது. அந்நாட்டின் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு மீது ஊழல் புகார் எழுந்து அவர் குற்றவாளி எனத் தீர்ப்பு வந்தது.
இதைத்தொடர்ந்து நெதன்யாகு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கைவைக்க, இந்தத் தீர்ப்பு தொடர்பாக நெதன்யாகு மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், அங்கு தொடர்ச்சியாக நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சியினருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், ஆட்சியமைக்க முடியாமல் தவித்துவருகிறது. இதைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் 69 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற தேர்தலில் 71 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.