தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இஸ்ரேலில் மீண்டும் கலவரம்; 305 பாலஸ்தீனியர்கள் படுகாயம்

இஸ்ரேல் காவலர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் மீண்டும் ஏற்பட்ட மோதலில் 305 பாலஸ்த்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.

By

Published : May 10, 2021, 8:29 PM IST

Palestine
Palestine

இஸ்ரேல்-பாலஸ்தீன் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. அங்குள்ள டமாஸ்கஸ் நகரில் இரு நாள்களுக்கு முன்னர் இரு தரப்பினருக்கும் இடையே கலவரம் வெடித்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர்.

இன்று (மே.10) மீண்டும் ஜெருசலேம் நகரில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் ரமலான் மாதத் தொழுகைக்கு பாலஸ்தீனயர்கள் குழுமியுள்ளனர். அப்போது, பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேல் காவலர்களும் இடையே மோதல் வெடித்தது. அதனைத் தொடர்ந்து கலவரம் ஏற்படவே, இஸ்ரேல் காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் 305 பாலஸ்தீனியர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், 228 பேர் மருத்துவ சிகிக்கையில் உள்ளதாகவும், சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details