இஸ்ரேலில் கடந்த ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த மாதம் 17ஆம் தேதி இஸ்ரேலில் மறுதேர்தல் நடைபெற்றது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த தேர்தலிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
முன்னாள் ராணுவத் தளபதி பென்னி கான்ட்ஸ் தலைமையிலான ப்ளூ அண்ட் ஒயிட் கட்சி 33 இடங்களுடனும், பிரதமர் நெதன்யாகுவின் ஆளும் லிக்குட் கட்சி 32 இடங்களுடனும் முன்னிலையில் உள்ளன.