தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நள்ளிரவில் 45 ராக்கெட்களை ஏவிய ஹமாஸ்: இஸ்ரேலின் பதிலடியால் 20 பேர் உயிரிழப்பு! - காசாமுனை ஹமாஸ்

இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பயங்கர மோதலால், ஜெருசலேம், ஹமாஸ் பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Hamas
ஹமாஸ்

By

Published : May 11, 2021, 10:13 AM IST

இஸ்ரேல்-பாலஸ்தீன் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதி ஹமாஸ் என்ற பயங்கரவாதிகள் அமைப்பு கட்டுபாட்டில் உள்ளது. இதனால், இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது ராக்கெட், ஏவுகணைகள் தாக்குதல் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், டமாஸ்கஸ் நகரில் சில நாள்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் இடையே கலவரம் வெடித்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர்.

மசூதி கலவரத்தில் 305 பாலஸ்தீனியர்கள் படுகாயம்

இந்நிலையில், நேற்று (மே.10) மீண்டும் ஜெருசலேம் நகரில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் ரமலான் மாத தொழுகைக்கு பாலஸ்தீனயர்கள் ஒன்றிணைந்துள்ளனர். அப்போது, பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதனைத் தொடர்ந்து கலவரம் ஏற்படவே, இஸ்ரேல் காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் 305 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர். இதில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக கூறப்படுகிறது.

மசூதி கலவரத்தில் 305 பாலஸ்தீனியர்கள் படுகாயம்

ஹமாஸின் தொடர் ராக்கெட் தாக்குதல்

இவ்விவகாரம் விஷ்வருபம் எடுக்க தொடங்கியது. பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலை குறிவைத்து கிட்டத்தட்ட 45 ராக்கெட்கள் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. பெரும்பாலான ராக்கெட் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர் ராக்கெட் தாக்குதல்களால், இஸ்ரேல் நகரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், தக்க பதிலடி கொடுக்க இஸ்ரேஸ் ராணுவம் முடிவு செய்தது.

வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

இஸ்ரேல் ராணுவம் பதிலடி

தாக்குதல் நடைபெற்ற சில மணி நேரத்திலே, காசா முனையில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய நபர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் பதிலடி தாக்குதலால் ஜெருசலேம், ஹமாஸ் பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மீண்டும் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், பெரும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக நாடுகள் அஞ்சுகின்றன.

போராட்டத்தை கைவிட கோரும் உலக நாடுகள்

இஸ்ரேல் பாதுகாப்பு படையினரும், பாலஸ்தீன மக்களும் தாக்குதலை கைவிட்டு அமைதிகாக்கும்படி ஐ.நா. அமைப்பு, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் உள்பட பல நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மோதல்

அமெரிக்கா கருத்து

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், "ஜெருசலெமில் பாலஸ்தீனர்களின் வன்முறைக்கு பின்னர் காசா பகுதியில் இருந்து பாலஸ்தீன பயங்கரவாதிகளால் இஸ்ரேல் மீது நடத்தப்படும் ராக்கெட் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இவை சண்டையை மேலும் தீவிரப்படுத்தலாம்’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details