வளைகுடா நாடான ஈரானில் பெட்ரோல் விலை கடந்த வாரம் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டது. இதனை எதிர்த்து ஈரானியர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் பெரும்பாலும் கலவரத்தில் முடிவதால் வன்முறைச் சம்பவம், உயிரிழப்புகளும், நடந்தேறுகின்றன. கலவரத்தை கட்டுப்படுத்த ஈரான் அரசு இணையச் சேவையை துண்டித்துள்ளது. ஈரான் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமினிஸ்ட் இண்டர்நேஷனல் என்னும் சர்வதேச மனித உரிமை அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.