சிரியா நாட்டில் உள்ள அஃப்ரின் நகரில் உள்ள முக்கிய சந்தையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அச்சமயத்தில், சந்தையை நோக்கி வந்த டிரக் மூலம் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பயங்கர வெடி விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
"வெள்ளை ஹெல்மெட்" என்ற தலைப்பில் தீயணைப்பு வீரர்கள் தீப்பிடித்ததை எதிர்த்துப் போராடும் புகைப்படங்களை சிரிய சிவில் பாதுகாப்பு மீட்புப் பணியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.