ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே உள்ள பசுமை பகுதி எனப்படும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அப்பகுதியில் அயல்நாட்டு தூதுவர்கள் மற்றும் நிர்வாகிகள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ள நிலையில், இன்று அதிகாலை மூன்று ராக்கெட்கள் விழுந்துள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ராக்கெட்டுகள் பாக்தாதின் அண்டை மாவட்டமான சபரன்நியா என்ற பகுதியிலிருந்து ஏவப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.