கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக இத்தாலி, டென்மார்க் போன்ற நாடுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்துவரும் மூன்று வாரங்களுக்கு அந்நாடு முடக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "இன்று மாலை (இந்திய நேரப்படி) முதல் குடிமக்கள் அனைவரும் (இங்கிலாந்து நாட்டினர்) பின்பற்ற வேண்டிய மிக எளிய அறிவுறுத்தலைக் கூறுகிறேன்.
- முடிந்தவரை வீட்டில் இருங்கள்.
- அத்தியாவசிய பொருள்களை வாங்குவது, குடும்பத்தினருடன் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் வாக்கிங், ஜாங்கிங் உள்ளிட்ட உடற்பயிற்சி செய்வது போன்ற செயல்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும்.
- மிகவும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள மட்டும் மக்கள் வெளியே செல்ல அனுமதியளிக்கப்படும்.