கரோனா வைரஸ் பிடித்து வைத்திருக்கும் சிறையிலிருந்து வெளிவர முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில், துருக்கி நாட்டில் 90 ஆயிரம் நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் கூறுகையில், "இஸ்லாமியரின் புனித மாதமான ரமலான் மாதம் முடிவதற்குள் கரோனா வைரஸை கட்டுப்படுத்தி ஜூன் மாதத்தில் துருக்கி நாடு பழைய நிலைக்கு வந்துவிடும்.