தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா அண்டாத அழகிய மலைக் கிராமம்! - போஸ்னியா கிராமம் லுக்கோமிர்

சராஜிவோ: உலகமே கரோனா பிடியில் சிக்கித் தவித்துவரும் வேளையில், போஸ்னியாவில் லுக்கோமிர் என்ற மலைக் கிராமத்தில் இதுவரை ஒருவருக்குக்கூட கரோனா நோய்த்தொற்று ஏற்படவில்லை.

lokomir village corona free
lokomir village corona free

By

Published : Jun 24, 2020, 1:41 PM IST

சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் (தீநுண்மி), கட்டுக்கடங்காமல் பரவி உலகையே ஆட்கொண்டுவருகிறது. இந்தத் தீநுண்மி காரணமாக உலகளவில் இதுவரை 93 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பால்கன் நாடுகளில் ஒன்றான போஸ்னியாவில் லுக்கோமிர் என்ற மலைக் கிராமத்தில் வாழும் மக்கள் கரோனாவைப் பற்றி துளியும் கவலைப்படாமல் எப்போதும் போல வாழ்ந்துவருகின்றனர்.

ஜெலாஸ்னிகா மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த அழகிய மலைக்கிராமத்தில் இதுவரை ஒருவருக்குக்கூட கரோனா நோய்த்தொற்று ஏற்படவில்லை.

இங்கு வாழ்ந்துவரும் விஜ்சில் கோமர் என்ற 83 வயது மூதாட்டி பேசுகையில், "இங்கு கரோனா என்பதே கிடையாது. முகக்கவசம், கையுறை என எதையும் அணியாமல் நாங்கள் இங்குச் சுதந்திரமாகச் சுற்றிவருகிறோம்" என்றார் மகிழ்ச்சியோடு.

ஒவ்வொரு ஆண்டும் பனிக்காலத்தில் உறையும் குளிரிலிருந்து தப்பிக்க தலைநகர் சராஜிவோவுக்கு இக்கிராமத்தினர் குடும்பமாகச் செல்வர். பனிக்காலம் முடிந்த பிறகு மீண்டும் கிராமத்துக்கே திரும்பிவிடுவர்.

அந்த வகையில், இந்தாண்டு மார்ச் தொடக்கத்தில் இவர்கள் ஊர் திரும்பினர். அதன் பிறகுதான், கரோனா காரணமாக போஸ்னியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஊரடங்கால் சுற்றுலாப் பயணிகளின்றி இந்த மலைக் கிராமம் சற்று வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஆனால், கரோனா தங்களை அண்டாததை நினைத்து இக்கிராம மக்கள் மிக மகிழ்ச்சியோடு வாழ்ந்துவருகின்றனர்.

போஸ்னியாவில் இதுவரை மூன்றாயிரத்து 200 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 150-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க :குற்றம் 03: உங்கள் அடையாளமும் திருடப்படலாம்!

ABOUT THE AUTHOR

...view details