ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடாகும். கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் இரண்டாம் இடத்தில் உள்ளது.
தற்போது புதிதாக 325 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் ஸ்பெயினில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 32 ஆயிரத்து 128ஆக உள்ளது. ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 903 பேர் குணமடைந்துள்ளனர். 23 ஆயிரத்து 822 பேர் இங்கு உயிரிழந்துள்ளனர்.