தமிழ்நாடு

tamil nadu

துருக்கி-கிரீஸ் இடையே மோதல்; சமாதன முயற்சியில் ரஷ்யா

கிழக்கு மெடிட்டரினியன் கடலின் உரிமை தொடர்பாக துருக்கி-கிரீஸ் இடையே எழுந்துள்ள மோதலை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்க ரஷ்யா களமிறங்கியுள்ளது.

By

Published : Sep 8, 2020, 9:34 PM IST

Published : Sep 8, 2020, 9:34 PM IST

Russia
Russia

வளைகுடா நாடுகள், ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று முக்கிய பிராந்தியங்களின் மத்தியில் உள்ள மெடிட்டரினியன் கடல் ராஜரீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தக் கடலின் கிழக்குப் பகுதியின் உரிமைத் தொடர்பாக கிரீஸ் மற்றும் துருக்கி இடையே தற்போது மோதல் போக்கு நிலவிவருகிறது.

இந்தக் கடல் பகுதியில் உள்ள எரிவாயுவுக்கு உரிமைக் கொண்டாடுவதில் நடக்கும் போட்டியில் இரு நாடுகளும் கடும் பூசல் மேற்கொண்டுவருகின்றன.

இரு தரப்பு ராணுவத்தினரும் ஒத்திகை நடவடிக்கைகளை மேற்கொண்டு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளனர்.

இந்நிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் அமைதி நிலையை உருவாக்க முன்வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இரு தரப்பும் அமர்ந்து பேசி உரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ளவதற்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கோமாவிலிருந்து மீண்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்!

ABOUT THE AUTHOR

...view details