தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 21, 2020, 4:12 PM IST

Updated : Aug 21, 2020, 6:00 PM IST

ETV Bharat / international

ஸ்புட்னிக் - வி உற்பத்தியில் இந்தியாவை நாடும் ரஷ்யா!

தடுப்பூசி உற்பத்தி தான் மிக முக்கியப் பிரச்னையாக உள்ளது என்றும், தடுப்பூசியை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடமும் இருக்கிறது என நம்புவதாகவும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் (ஆர்.டி.ஐ.எஃப்) தலைமை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஸ்புட்னிக் - வி
ஸ்புட்னிக் - வி

மாஸ்கோ: கரோனா மருந்தான ‘ஸ்புட்னிக் - வி’ உற்பத்தியில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் செச்செநோவ் நகரிலுள்ள மாஸ்கோ ஸ்டேட் மருத்துவப் பல்கலைக்கழகம், ரஷ்யாவின் கமாலேயா தேசிய மைக்ரோபயாலஜி ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து கரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்திருப்பதாக ரஷ்யா அறிவித்திருந்தது.

இந்த மருந்தை தனது மகள் உடலில் செலுத்தி சோதனைக்கு உட்படுத்தியதாகவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார். இந்தத் தடுப்பு மருந்திற்கு ‘ஸ்புட்னிக் - வி’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூன்றாம் கட்ட சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.

இச்சூழலில், மருந்தின் உற்பத்தியைப் பெருக்க இந்தியாவின் பங்களிப்பை ரஷ்யா நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்புட்னிக் - வி தயாரிப்புக்காக இந்தியாவுடன் கைகோர்க்க ரஷ்யா முன்வருவதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் (ஆர்.டி.ஐ.எஃப்) தலைமை நிர்வாக அலுவலர் கிரில் ட்மிட்ரிவ் தெரிவித்துள்ளார்.

“லத்தீன், அமெரிக்கா, ஆசியா உடன் மத்தியக் கிழக்கு நாடுகள் தடுப்பூசி தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. தற்போது தடுப்பூசி உற்பத்தி தான் மிக முக்கியப் பிரச்னையாக உள்ளது. நாங்கள் இந்தியாவின் பங்களிப்பை எதிர்பாக்கிறோம். தடுப்பூசியை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடமும் இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இது போன்ற நோய் தடுப்பு மருந்தினை பெருமளவு தயாரிப்பதில் இந்தியா நல்ல திறன் கொண்ட நாடாகும். இதில் சர்வதேச ஒத்துழைப்பை ரஷ்யா எதிர்நோக்கியுள்ளது” என கிரில் ட்மிட்ரிவ் கூறியிருக்கிறார்.

இதனால், இந்தியாவுடன் நட்புறவில் இருக்கும் ரஷ்யாவுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஸ்புட்னிக்- வி தடுப்பூசி மருந்து குறித்த அடிப்படை விவரங்களை ரஷ்யாவிடம் இந்தியா கேட்டுள்ளதாகவும், அதற்கான தூதரகப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Last Updated : Aug 21, 2020, 6:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details