தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக லண்டனில் போராட்டம்!

லண்டன்: குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் லண்டனில் அமைந்துள்ள இந்திய உயர் ஆணையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By

Published : Dec 16, 2019, 11:17 AM IST

Updated : Dec 16, 2019, 11:39 AM IST

Modi government  Citizenship Amendment Act  Protests in UK  Indian Overseas Congress  குடியுரிமை சட்டத்திருத்த மசோதவிற்கு எதிராக லண்டனின் போராட்டம்  மோடிக்கு எதிராக லண்டனில் போராட்டம்
Protests in UK over Citizenship Amendment Act,

குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், மோடி அரசாங்கத்தின் தோல்விகளையும் எதிர்த்து பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பிரிட்டனில் வாழும் அஸ்ஸாமிகள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிந்தவாறு, ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் என்றும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை திரும்பப்பெறுங்கள் என்ற பதாகைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நாடுகளில் உள்ள தலைநகரங்களில் பாரத் பாச்சாவ் ( இந்தியாவை காப்பாற்றுங்கள்) என்ற பேரணியை ஏற்பாடு செய்து நடத்தினர். அதன்படி லண்டனில் நடந்த பேரணியில் பங்கு பெற்றவர்கள், பாஜக அரசு பெண்களுக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு எதிராகவும் இருக்கிறது என்றும்; சிறுபான்மையினருக்கு எதிராக இருக்கிறது என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பேசுகையில், "இந்திய இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். பாஜக ஆட்சியில் இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. தற்போது அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தம் வடகிழக்கு மாநிலங்களில் நெருப்பை பற்ற வைத்திருக்கிறது. இந்த சட்டமானது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் இருக்கிறது " என்றார்.

இதையும் படிங்க: குடியுரிமை சட்டத் திருத்த மசோதா - மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் 50 பேர் கைது!

Last Updated : Dec 16, 2019, 11:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details