தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 13, 2019, 3:12 PM IST

ETV Bharat / international

Turkey Offensive: பாரிஸில் துருக்கிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

பாரிஸ்: வடகிழக்கு சிரியாவில் குர்து பேராளிகளுக்கு எதிராக துருக்கிப் படையினர் மேற்கொண்டுவரும் தாக்குதல்களைக் கண்டித்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

paris kurd protest

Turkey Offensive வடகிழக்கு சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக்கொள்வதாக அந்நாட்டு அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள குர்து போராளிகள் மீது துருக்கிப் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐஎஸ் பயங்கரவாதிகளை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு பெரும் உதவியாக இருந்த குர்து பேராளிகளை, பயங்கரவாதிகள் என துருக்கி அரசு கருவதுவதே இந்த தாக்குதலுக்கான காரணமாக இருக்கிறது. இந்த மோதலில் தற்போதுவரை 399 குர்து பயங்கரவாதிகளைக் கொன்றுவிட்டோம் என்று துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், குர்துகள் மீதான துருக்கி தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குர்துகளின் கொடிகளை ஏந்தியவாறு வீதிகளில் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் துருக்கி அரசுக்கும், அதிபர் எர்டோகனுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க : 'உருத்தெரியாமல் அழித்துவிடுவோம்!' - துருக்கியை மிரட்டும் ட்ரம்ப்!

ABOUT THE AUTHOR

...view details