நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பாக கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து தூரத் தொலைவு கொண்ட பாதைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் செப்டம்பர் 2ஆம் தேதி தனியாக பிரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 1:30 மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கப்படும் என உலக நாடுகள் அனைத்தின் கவனத்தையும் ஈர்த்துவந்தது. ஆனால் அதன் சிக்னல் திடீரென துண்டிப்பானது. இந்த பயணத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும், பல நாடுகளின் தலைவர்கள் இஸ்ரோவின் முயற்சியை பெரிதும் பாராட்டிவருகின்ரனர்.