இந்தியாவின் பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் தொகையை மோசடியாக கடன் பெற்றது கடந்த 2018ஆம் ஆண்டு அம்பலமானது. மேலும், அவர் மீது மோசடி புகார்கள் எழுந்துவந்த நிலையில், இந்தியாவிலிருந்து தப்பியோடி லண்டன் நகரில் தஞ்சம் புகுந்தார்.
அவரை இந்தியா கொண்டுவரும் முயற்சியில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நீரவ் மோடியை இந்தியா மீட்டுவருவது தொடர்பாக வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் இன்று (செப். 7) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.