தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அணிசேரா நாடுகள் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை - அணிசேரா நாடுகள் சார்பில் நடைபெறும் மாநாடு

நியுடெல்லி: அஜர்பைஜான் நகரில் அணி சேரா நாடுகள்(NAM) சார்பில் நடக்கும் மாநாட்டில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொள்கிறார்.

பிரதமர்

By

Published : Oct 23, 2019, 5:51 PM IST

கூட்டுசேரா இயக்கம் அல்லது அணி சேரா இயக்கம் (Non-Aligned Movement, NAM) எந்தவொரு அதிகார மையத்தின் சார்பாகவோ எதிராகவோ அணிசேராத நாடுகளின் குழுமமாகும். இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாகவும் 17 நாடுகள் பார்வையாளர்களாகவும் உள்ளனர். 2016 இல் இந்த குழுமத்தின் 17ஆவது மாநாடு வெனிசுவேலாவில் இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது கஜகஸ்தான் நாட்டில் உள்ள அஜர்பைஜான் நகரில் இந்த இயக்கத்தின் மாநாடு நடைபெறுகிறது. வரும் அக்டோபர் 25,26 ஆகிய தேதிகளில் நடக்கும் இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொள்கிறார்.

சில காரணங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இந்த அணிச்சேரா இயக்கமானது 1961ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்றுமுதல் இன்று வரை அணிசேரா இயக்க மாநாட்டை நிராகரித்த முதல் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.


இதற்கு முன்னர் பிரதமர் பொறுப்பில் இருந்த சரண் சிங் 1979ஆம் ஆண்டு இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டில் கலந்து கொள்ளும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, உறுப்பு நாட்டு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:முதலீட்டாளர்களைக் கவர பாக். புதிய முயற்சி! வைரலாகும் பெல்லி டான்ஸ் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details