தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கோவிட்-19 இரண்டாம் அலையால் திணறும் பிரான்ஸ்; மீண்டும் லாக்டவுன்? - சர்வதேச கரோனா பாதிப்பு

பிரான்ஸ் நாட்டில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்துவருவதால் அங்கு மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு தேவைப்படலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

COVID-19
COVID-19

By

Published : Oct 27, 2020, 1:10 PM IST

உலகளவில் கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இதுவரை நான்கு கோடியே 37 லட்சத்து 76 ஆயிரத்து 587 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 64 ஆயிரத்து 515ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 21 லட்சத்து 79 ஆயிரத்து 748ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் நான்கு லட்சத்து 48 ஆயிரத்து 413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 506 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அதிகளவிலான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 89 லட்சத்து 62 ஆயிரத்து 783 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 31 ஆயிரத்து 045 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. பிரான்ஸ் நாட்டில் தற்போது ஒரே நாளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா பாதிப்பு ஏற்படுகிறது. நாள்தோறும் பாதிப்பு தீவிரமடைந்துவருவதால், அங்கு மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு தேவைப்படலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: ஏழு குழந்தைகள் உயிரிழப்பு, 70 காயம்!

ABOUT THE AUTHOR

...view details