தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 17, 2020, 3:38 PM IST

ETV Bharat / international

ஐரோப்பாவில் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பு!

உலகளவில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 20 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்பதாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

COVID-19
COVID-19

உலகளவில் கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. இதுவரை மூன்று கோடியே 95 லட்சத்து 93 ஆயிரத்து 953 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 09 ஆயிரத்து 252ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே 96 லட்சத்து 61 ஆயிரத்து 167ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்பதாயிரத்து 290 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அதிகளவிலான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

இதுவரை அந்நாட்டில் 82 லட்சத்து 88 ஆயிரத்து 278 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 23 ஆயிரத்து 644 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் தீவிரத்தன்மை குறைந்துவரும் நிலையில், ஐரோப்பாவில் பெருந்தொற்றின் இரண்டாம் கட்ட அலை தீவிரமடைந்துவருகிறது. இதையடுத்து அங்கு பல்வேறு நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.

இதையும் படிங்க:தேசப் பாதுகாப்பு, கோவிட்-19 : அடுத்த விவாதத்திற்குத் தயாராகும் ட்ரம்ப் - பிடன்

ABOUT THE AUTHOR

...view details