பிரான்ஸ் நாட்டில் நேற்று ஒரே நாளில் 23 ஆயிரத்து 302 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் கரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
திங்கள் கிழமை முதல் நேற்றுவரை 69 பேர் கரோனா தொற்றினாலும், சுவாச நோய் காரணமாக 368 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக அந்நாட்டில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 89,301 ஆக உயர்ந்துள்ளது.