தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 13, 2020, 10:57 PM IST

ETV Bharat / international

காஷ்மீர், ஈரான் விவகாரம் குறித்து பிரான்ஸ் அதிபருடன் விரிவாகப் பேசிய மோடி

ஹைதராபாத்: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நடத்திய தொலைபேசி உரையாடலின் முக்கிய அம்சங்கள் குறித்து மூத்த ஊடகவியலாளர் ஸ்மிதா சர்மா எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

france
france

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை பகிர்ந்து கொண்டார். அப்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் சிக்கல் குறித்தும் அவர்கள் விரிவாக ஆலோசித்தனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2018ஆம் ஆண்டு ஈரானுடனான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார். இந்த ஒப்பந்தத்தில் உறுப்பு நாடாக பிரான்ஸும் உள்ளது கவனிக்க வேண்டிய அம்சமாகும்.

கடந்த வாரம் ஈரான் அந்நாட்டு பாதுகாப்பு படையினரின் கவனக்குறைவால் உக்ரைன் நாட்டு விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது. 176 உயிர்களை பலிவாங்கிய இந்த செயலுக்குப் பின் மத்திய கிழக்கு பகுதியில் பதற்ற சூழல் உருவாகியது. அமெரிக்கா - ஈரான் மத்தியில் உருவாகியுள்ள இந்த பதற்ற சூழலை தணிக்கும் நோக்கில் பிரான்ஸும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் முன்னெடுத்துள்ளன.

வளைகுடா நாடுகளில் சுமார் 80 லட்சம் இந்தியர்கள் வசித்துவரும் நிலையில், அப்பகுதியில் நிலவும் அசாதாரண சூழல் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இந்தியாவின் எரிசக்தி திறன் மற்றும் ஈரானின் சபாஹார் துறைமுகத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள முதலீடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

கடந்த 10ஆம் தேதி பிரான்ஸ் அதிபர் மேக்ரோனுடன், இந்திய பிரதமர் மோடி தொலைபேசி மூலம் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து பிரான்ஸ் நாட்டு குடியரசு மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் சிக்கல் குறித்து விரிவாக விவாதித்த இரு நாட்டுத் தலைவர்களும் அப்பகுதியில் அமைதி திரும்ப அனைத்து முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்குப் பின் அமெரிக்கா, நார்வே, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தூதுவர்கள் காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டு அதன் கள நிலவரத்தை ஆய்வு செய்தனர். பிரான்ஸ் அதிபருடனான தொலைபேசி உரையாடலில் காஷ்மீர் விவகாரமும் பேசப்பட்டது முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

இன்னும் சில நாட்களில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் இதில் பிரான்ஸும் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வீட்டுக்காவலில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர்களான மெஹ்பூபா முஃப்தி, பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா ஆகியோரை இவர்கள் ந்திப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் சில ஐரோப்பிய பிரதிநிதிகள் காஷ்மீருக்கு மேற்கொண்ட பயணம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இந்தப் பயணம் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.

அமெரிக்க தூதர் கென்னத் ஜென்னர் தனது காஷ்மீர் பயணம் குறித்து தெரிவித்த அறிக்கையில், அரசியல் தலைவர்கள் கைது மற்றும் தகவல் பறிமாற்ற சிக்கல் குறித்து தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் நகர்வுகளை அமெரிக்க தூதரகமும் வெளியுறவுத்துறை அலுவலர்களும் உற்றுநோக்கிவருகிறோம். அங்கு அரங்கேறியுள்ள அரசியல் கைது, இணைய சேவை துண்டிப்பு கவலையை அளிக்கிறது. அங்கு இயல்பு நிலை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலர் அலீஸ் வெல்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தெற்காசிய நாடுகளான பாகிஸ்தான், இந்தியா, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அலீஸ் வெல்ஸ் வரும் 15-18 தேதிகளில் அமெரிக்கா இந்தியா இரு தரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளார். இருநாட்டு வர்த்தகம் மற்றும் சிவில் சமூகம் சார்ந்து இப்பேச்சுவார்த்தை அமையும் எனவும் தெரிவித்துள்ளார். இந்திய பயணத்திற்கு பிறகு அவர் இஸ்லாமாபத் செல்லவுள்ளார்.

பிரான்ஸ் அதிபருடன் மோடி நடத்திய தொலைபேசி உரையாடலில் பருவநிலை மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருநாட்டுத் தலைவர்களும் ராணுவம், அணுசக்தி, இந்திய பசிபிக் பிராந்திய நலன் ஆகியவை குறித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டதாக பிரான்ஸ் நாட்டுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: க்ரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகளை அள்ளிய ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’, ஃப்ளீபேக்!

ABOUT THE AUTHOR

...view details