தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 4, 2022, 8:06 AM IST

Updated : Mar 4, 2022, 11:19 AM IST

ETV Bharat / international

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல்

உக்ரைனின் சாபோரிஷியாவில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதால் கதிர் வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது.

Fire breaks out at Zaporizhzhia Nuclear Power Plant in Ukraine
Fire breaks out at Zaporizhzhia Nuclear Power Plant in Ukraine

கீவ்:உக்ரைன் மீது ரஷ்யா படைகள் பிப். 24ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்திவருகின்றன. ஒன்பதாவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. அதன்படி இன்று (மார்ச் 4) உக்ரைனின் சாபோரிஷியாவில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள், சாபோரிஷியா அணுமின் நிலையம் மீது குண்டுகள் விழுந்தது. அங்குள்ள ஆறு உலைகளில் ஒன்று தீப்பிடித்து எரிந்துவருகிறது. இதன்காரணமாக கதிர் வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றன. இதுகுறித்து அணு உலையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த சாபோரிஷியா உலையில் ஆயிரக்கணக்கான டன் அளவு அணு எரிபொருள்கள், ரசாயனங்கள் உள்ளன. இங்கு ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன என்று தெரிவித்தார்.

1986ஆம் ஆண்டில் உக்ரைன் நாட்டின் செர்னோபில் அணு உலை வெடித்தது. இதன்காரணமாக 30 பேர் உயிரிழந்தனர். ஆனால் கதிர் வீச்சு காரணமாக 2,000 பேர் இரத்தப்போக்கு, உறுப்புச் சிதைவு, முடி கொட்டுதல், தோல்புற்று நோய் உள்ளிட்ட பக்க விளைவுகளால் உயிரிழந்தனர். அந்த வகையில், சபோரோஷியா உலை வெடித்தால், செர்னோபில் அணுஉலை பாதிப்பை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கார்கீவ்வில் இருந்து நடந்தாவது வெளியேறுங்கள் - இந்தியர்களுக்கு அவசர உத்தரவு

Last Updated : Mar 4, 2022, 11:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details