தமிழ்நாடு

tamil nadu

கரோனா உயிரிழப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு!

By

Published : Mar 25, 2020, 9:54 AM IST

ஜெனிவா: அமெரிக்காவில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

who covid 19
who covid 19

கரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் தற்போது 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி உலகம் முழுவதும் 196 நாடுகள் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் அதிகப்படியாக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து 95 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடுகளில் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, மேற்குப் பசிபிக் பகுதிகளில் 96 ஆயிரத்து 580 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு 3 ஆயிரத்து 502 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 16 ஆயிரத்து 362 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்ததாக, உலக சுகாரதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில், அமெரிக்காவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details