ஜெனீவா: கரோனா இரண்டாவது அலைக்கு எதிராக இந்தியா கடும் போராட்டத்தை நடத்திவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.60 லட்சத்திற்கும் அதிகமான கரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், மூன்றாயிரத்து 300 இறப்புகள் பதிவாகியுள்ளன.
கரோனாவுடன் போராடும் இந்தியா: உதவிக்கரம் நீட்டும் உலக சுகாதார அமைப்பு! - கரோனா இரண்டாவது அலை
கரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடிவரும் இந்தியாவுக்கு உதவும் வண்ணம் உபகரணங்கள், பொருள்களை வழங்குவதாக உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப் தெரிவித்துள்ளன.
![கரோனாவுடன் போராடும் இந்தியா: உதவிக்கரம் நீட்டும் உலக சுகாதார அமைப்பு! இந்தியாவிற்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள்: WHO, UNICEF](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11576587-thumbnail-3x2-who.jpg)
இந்தியாவிற்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள்: WHO, UNICEF
இந்நிலையில், கடந்த செவ்வாயன்று, உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் 2,600 சுகாதார வல்லுநர்களைப் பணியமர்த்தி, தினசரி கரோனா பாதிப்பு, இறப்பு அதிகரிப்பை எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவிற்கு உதவும் வகையில் உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப் ஆகியவை 7,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் வழங்கலுக்கான 500 நாசி சாதனங்கள், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தாவரங்கள், கரோனா சோதனை இயந்திரங்கள், தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள், பொருள்களை வழங்குகின்றன.