சீனாவின் வூஹானில் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது உலகெங்கிலும் பரவி மானிடத்தை அச்சுறுத்தி வருகிறது.
கரோனா பரவத் தொடங்கி வெறும் நான்கு மாதங்களே முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 2 லட்சத்து 7 ஆயிரத்து 928 பேர் உயிரிழந்துள்ளனர். 30 லட்சத்து 14 ஆயிரத்து 895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் அதிகாரபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கைகளை பிரிட்டன் அரசு கோட்டுரு (Graph) ஒன்றை ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிட்டிருந்தது.
இந்த கோட்டுருவில் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஸ்வீடன், தென் கொரியா, சீனா ஆகிய நாடுகளில் உயிரிழப்பு எண்ணிக்கைகள் இடம்பெற்றிருந்தன.