1984ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயிலில் ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொற்கோயிலில் பயங்கரவாத நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இந்த ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார். இந்த நடவடிக்கையில் பல்வேறு சீக்கியர்கள் உயிரிழந்த நிலையில் இந்த வாரம் இந்தச் சம்பவத்தின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.