தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கிங் பிஷர் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப உதவி: அரசுக்கு மல்லையா கோரிக்கை - kingfisher workers

லண்டன்: கரோனா அச்சுறுத்தல் காரணமாக, கிங் பிஷர் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப இந்திய அரசிடம் விஜய் மல்லையா கோரிக்கைவிடுத்துள்ளார்.

விஜய் மல்லையா
விஜய் மல்லையா

By

Published : Mar 31, 2020, 12:05 PM IST

Updated : Mar 31, 2020, 12:35 PM IST

கரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிங் பிஷர் நிறுவனமும் தனது தயாரிப்புகளை நிறுத்தியுள்ளது. ஆனால், ஊழியர்களை இன்னும் வீட்டிற்கு அனுப்பமுடியவில்லை. எனவே, அவர்களை வீட்டிற்கு அனுப்ப அரசு உதவ முன்வர வேண்டும் என விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்தடுத்து அவர் பதிவிட்ட பதிவுகளில், ”சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஊரடங்கு உத்தரவை இந்திய அரசு செயல்படுத்திவருகிறது. நாங்கள் மதிக்கிறோம். அனைத்து நிறுவனங்களும் முழுமையாக செயல்படுவதை நிறுத்திவிட்டன. அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். சமூக விலகலை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். வீட்டிலேயே இருந்து குடும்பம், செல்லப் பிராணிகளுடன் இனிமையாக நேரத்தை செலவிட வேண்டும். நானும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வங்கிகளுக்கு பணம் செலுத்துவது பற்றி பதிவிட்டதில் ”கே.எஃப்.ஏ (KFA) வாங்கிய கடன் தொகையினை 100 விழுக்காடு திரும்ப செலுத்த, வங்கிகளுக்கு பல சலுகைகளை வழங்கினேன். ஆனால், வங்கிகளும் பணத்தை எடுக்க தயாராக இல்லை. வங்கிகளின் உத்தரவின்பேரில் அமலாக்க செயலரகமும் அதற்கான ஆவணங்களை வெளியிட முன்வரவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில், நான் எஃப்.எம் கேட்க விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தொடரும் தற்கொலைகள்....மருத்துவர் பரிந்துரைத்தால் மது: கேரள அரசு!

Last Updated : Mar 31, 2020, 12:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details