இந்தியாவிற்கான பிரிட்டன் தூதராக அலெக்சாண்டர் எல்லிஸ்-ஐ நியமித்து பிரிட்டன் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக பதவியில் இருந்த பிலிப் பார்ட்டன் ஓய்வுபெற உள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
53 வயதாகும் அலெக்சாண்டர் எல்லிஸ் தேசிய துணை பாதுகாப்பு ஆலோசராக இருந்துள்ளார். இவர் ராஜாங்க ரீதியிலும், பாதுகாப்புத்துறையிலும் மிக முக்கிய பங்கை ஆற்றியுள்ளார்.
இந்த அறிவிப்புக்கு பிறகு அலெக்சாண்டர் எல்லிஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "என்னுடைய குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு செல்லவிருப்பது மிகுந்த உற்சாகமாக இருக்கிறது. 35 ஆண்டுகளுக்கு முன்னர் நான் இங்கிலாந்திற்கு வெளியே வாழ்ந்த முதல் நாட்டிற்கு (இந்தியா) திரும்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.