ஜோர்ஜியாவில் சில அரசியல் கட்சி உறுப்பினர்கள், அக்டோபர் 31இல் வெளியான நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகம் வெளியே பேரணி ஒன்றையும் நடத்தினர். பேரணியின் போது மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் பதவி விலக வேண்டும் என்றும், உடனடியாக மறு தேர்தல் நடத்திட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, மத்திய தேர்தல் ஆணையம் அலுவலகத்தை நோக்கி பயணித்த போராட்டக்காரர்கள், அலுவலக வாசலில் காவல் துறையினரால் தடுத்த நிறுத்தப்பட்டனர். அப்போது, சில காவல் துறையினரின் வாகனங்களை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.