2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தில் இலங்கையிலுள்ள தேவாலயங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புத் தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் கொன்றுகுவிக்கப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றிருந்தனர். இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த விசாரணையை துரிதப்படுத்த அரசு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டு பாதுகாப்புத் துறை மேஜர் ஜெனரல் குணரத்ன அளித்துள்ள அறிக்கையில், “கொழும்பு, நெகம்போ, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நடந்த தாக்குதல்கள் குறித்து விரைவான விசாரணையை உறுதிசெய்ய அதிபர் கோத்தபய ராஜபக்சவின் உத்தரவைத் தொடர்ந்து பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.