தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை உயர்வு - இலங்கை குண்டுவெடிப்பு

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310ஆக உயர்ந்துள்ளது.

srilanka

By

Published : Apr 23, 2019, 11:33 AM IST

இலங்கையில் நேற்று முன் தினம் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு உலகத்தையே உலுக்கியுள்ளது. மேலும் இலங்கை மக்கள் யாரும் பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே குண்டு வெடிப்பில் சிக்கி 290 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதில் ஆறு இந்தியர்கள் உட்பட 27 வெளிநாட்டினரும் அடங்குவர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில், தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 310ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details