தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'வடகொரியாவுடனான பிரச்னையை யதார்த்தமான முறையில் தீர்க்கத் தயார்' - தென்கொரியா - தென் கொரியா பிரதமர் மூன் ஜே இன்

சியோல்: வடகொரியாவுடனான பிரச்னையை யதார்த்தமான, நடைமுறைக்கு உகந்த வகையில் தீர்க்கத் தயார் என தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

korea
korea

By

Published : Apr 28, 2020, 9:33 AM IST

இது குறித்து மூத்த அரசு ஆலோசகர்களுடன் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், "பன்முன்ஜோம் அமைதி ஒப்பந்தத்தை இரு கொரியா நாடுகளும் கடைப்பிடிக்க முடியாமல்போனதற்கு வடகொரியா மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள தடைகளே காரணம்.

ஆனால், இந்த நிலைமை சீராகும்வரை நாம் காத்திருக்க முடியாது. மாறாக, தடைகள் இருக்கும்போதே யதார்த்தமான, நடைமுறைக்கு உகந்த வழியில் சிறு, சிறு முன்னெடுப்புகளோடு பிரச்னையைத் தீர்க்க முயற்சிசெய்ய வேண்டும்.

கரோனா தீநுண்மி கால்நடைகளுக்கு வரும் தொற்று நோய். கொரிய எல்லைப் பகுதிகளில் நிகழும் பேரிடர்கள், பருவநிலை மாற்றம் ஆகிய பிரச்னைகளை இரு நாடுகளும் இணைந்து எதிர்கொள்ளலாம்.

இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் ரயில் சேவைகளைத் தொடங்க தேவையான நடவடிக்கைகளைத் தென் கொரியா மேற்கொள்ளும்" என்றார்.

இதையும் படிங்க : கிம் ஜாங் உன் நலமாக உள்ளார் - தென் கொரியா தகவல்

ABOUT THE AUTHOR

...view details