தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த மாற்றத்திற்குப் பின்னர் அந்நாட்டு குடிமக்கள் ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறும் அவலம் தொடர்ந்து நிகழ்ந்துவருகிறது.
இந்தியா அண்டை நாடான மியான்மர் 1,600 கி.மீ. நீளத்திற்கு வேலியில்லா எல்லையை கொண்டுள்ளது. வட கிழக்கு மாநிலங்களான அருணாசல் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்கள் மியான்மருடன் சர்வதேச எல்லையை பகிர்கிறது.
இந்த மாநிலங்களில் மியான்மர் மக்கள் குடியேற்றம் நிகழ்வதாக தொடர்ந்து புகார் எழுந்துவருகிறது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்ரெஸ் முக்கிய தகவலை கூறியுள்ளார்.