சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடையை முடிவுக்குக் கொண்டுவர லூஜெய்ன் அல்-ஹத்லூல் என்ற பெண் குரல் கொடுத்தார். இவருக்கு ஆதரவு கிடைத்திருந்தாலும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2018ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக அவருக்கு 7 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், தற்போது அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவரின் தண்டனை காலத்தைக் குறைத்து நீதிபதி தீர்ப்பளித்திருந்து குறிப்பிடத்தக்கது.