பாகிஸ்தானின் வாசிரிஸ்தான் பகுதி பல ஆண்டுகளாக தலிபான்களின் கோட்டையாகப் பார்க்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் சகோதரிகள் இளைஞர் ஒருவரை முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் கோபமடைந்த அப்பெண்களின் உறவினர் ஒருவர் அவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார். இந்தச் சம்பவம் நடந்து 5 நாள்கள் ஆகியுள்ள நிலையில், ஆணவக் கொலை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் முகமது அஸ்லாம் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். இதற்கு முன்னதாக சகோதரிகளை முத்தமிட்ட இளைஞரிடம் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.