இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கரேனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு 341 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகா எல்லை இரண்டு வாரங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்றுக்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் 45 பேரும், கைபர்-பக்துன்கவாவில் 34 பேரும், பஞ்சாபில் 33 பேரும், கில்கிட் பலூசிஸ்தானத்தில் 15 பேரும் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.