தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சுதந்திர தின விழா : காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் - பாகிஸ்தான் சுதந்திர தின விழா

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாட்டின் 74ஆவது சுதந்திர தின விழாவில் காஷ்மீர் குறித்து அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார்.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

By

Published : Aug 14, 2020, 4:38 PM IST

கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்து வரும் நிலையில், பாகிஸ்தானில் 74ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக. 14) கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 31 குண்டுகள் முழங்க தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடையே உரையாடிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார்.

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அரசியலாக்கும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி அடைந்துள்ள நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து இம்ரான் கான் தற்போது பேசியுள்ளார். காஷ்மீருடன் துணை நிற்கும் நாளும் இன்று பாகிஸ்தானில் கொண்டாடப்பட்டது. ஆனால், அதற்கு பெரும் ஆதரவு கிடைக்கவில்லை.

இந்தியாவில் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: எல்லைப் பிரச்னை : முழுமையான விசாரணை நடத்த சீனா கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details