தெற்கு ஆசிய பிராந்தியத்தின் முக்கிய பிரச்னையாக பயங்கரவாதம் இருந்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தாலாக விளங்கும் பல பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு ராணுவத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் காபூர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை முன்னாள் அரசுகள் முறையாக கையாளவில்லை என வருத்தம் தெரிவித்த அவர், இந்த அலட்சியத்தால் அந்நாட்டின் பொருளாதாரம் கணிசமான இழப்புக்களை சந்தித்து வருவதாகவும் கூறினார்.