இந்தியாவின் முன்னாள் கடற்படை அலுவலரான குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தான் பகுதியில் உளவு பார்த்ததாகக் கூறி 2013ஆம் ஆண்டு அந்நாட்டு அரசு அவரை கைது செய்தது. ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்துவரும் இந்தியா, குல்பூஷன் ஜாதவை ஈரானிலிருந்து பாகிஸ்தான் கடத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டியது.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசு குல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையைச் சர்வதேச நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்து, பாகிஸ்தான் அளித்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது.