நியூசிலாந்து:கரோனாவை எதிர்த்துப் போராடும் இந்தியாவிற்கு ஆதரவு அளித்துவருவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் நானாயா மஹுதா தெரிவித்துள்ளார்.
"கடினமான இந்த நேரத்தில் இந்தியாவிற்குத் துணை நிற்கிறோம். சவாலான சூழலை எதிர்த்துப் போராடும் முன்களப் பணியாளர்களைப் பாராட்டுகிறோம்" என நானாயா மஹுதா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.