உலகைச் சூறையாடி வரும் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் ஏராளமான ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவிட்-19 நோயை முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய ஆன்டிபாடிகளை தாங்கள் கண்டறிந்துள்ளதாக சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வுக்காக, பீஜிங் யூவான் மருத்துவமனையோடு இணைந்து பணியாற்றிய ஆய்வாளர்கள் குணமடைந்த 80 கோவிட்-19 நோயாளிகளின் உடம்பிலிருந்து ரத்த மாதிரிகளை சேகரித்து, அதிலுள்ள ஆன்டிபாடிகளைப் பிரித்து எடுத்து விலங்குகள் மீது செலுத்தி பரிசோதித்துள்ளனர்.