கம்யூனிஸ்ட் கட்சியின் தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், இந்தியாவின் திருத்தப்பட்ட புதிய வரைப்படத்தை எதிர்த்து போராட்டம் நடத்தத் திட்டமிட்ட நிலையில், அந்த அமைப்பைச் சேர்ந்த 20 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்த கைது நடவடிக்கை மைத்திகர் எனுமிடத்தில் நடந்ததாகக் காவல் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். கலாபனியை தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகக் காட்டிய இந்தியாவின் புதிய வரைபடத்தைக் கண்டித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என நவம்பர் 6ஆம் தேதி அந்த அமைப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதே இந்த கைது நடவடிக்கைக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரின் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்றிய பிரதேசங்களின் (யு.டி) புதிய வரைபடங்களையும், லடாக், ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களை இணைத்தும் இந்திய அரசு புதிய வரைபடத்தைக் கடந்த வாரம் வெளியிட்டதன் விளைவாக அந்த அமைப்பு போராட்டத்தை அறிவித்தது.